Donate
❤
Ask your question
Kural list
About us
Donate
❤
49. காலமறிதல்
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
குறள் 481
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.
குறள் 482
அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.
குறள் 483
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.
குறள் 484
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.
குறள் 485
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
குறள் 486
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
குறள் 487
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.
குறள் 488
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.
குறள் 489
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.
குறள் 490
Previous
Next