பொருட்பால் · குறள் 988 / 1330
99. சான்றாண்மை

இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின்.

Poverty is no disgrace to one of enduring nobility.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

சால்பு என்கிற உறுதியைச் செல்வமெனக் கொண்டவருக்கு வறுமை என்பது இழிவு தரக் கூடியதல்ல.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

சால்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - சால்பு என்று சொல்லப்படும் வலி உண்டாகப்பெறின்; ஒருவற்கு இன்மை இளிவு அன்று - ஒருவனுக்கு நல்குரவு இளிவாகாது. (தளராமை நாட்டுதலின், வலியாயிற்று. இன்மையான் வருவதனை இன்மை தானாக உபசரித்துக் கூறினார். சால்புடையார் நல்கூர்ந்தவழியும் மேம்படுதலுடையார் என்பதாம்.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

சான்றாண்மை எனப்படும் மன ஆற்றல் மட்டும் ஒருவனிடம் இருந்து விடுமானால், வறுமை அவனுக்கு இழிவு ஆகாது.

— சாலமன் பாப்பையா