பொருட்பால்நல்குரவு(அதிகாரம் 105)

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்கொன்றது போலும் நிரப்பு.
Oh, how I dread it I Will that beggary that almost killed me yesterday assail me today also?
— V.R. Ramachandra Dikshitar (1949)
மு. வரதராசன் விளக்கம்
நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்).
— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி
கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப் படுத்திய வறுமை,தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான்.
— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர் விளக்கம்
நெருதலும் கொன்றது போலும் நிரப்பு - நெருநற்றும் கொன்றது போன்று எனக்கு இன்னாதவற்றைச் செய்த நல்குரவு; இன்றும் வருவது கொல்லோ - இன்றும் என்பால் வரக்கடவதோ, வந்தால் இனி யாது செய்வேன்?(அவ்வின்னாதனவாவன, மேற்சொல்லிய (குறள்.1045)துன்பங்கள், நெருநல் மிக வருந்தித் தன் வயிறு நிறைத்தான் ஒருவன் கூற்று.)
— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா விளக்கம்
நேற்று என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைத் தந்த இல்லாமை, இன்றும் கூட வருமோ?
— சாலமன் பாப்பையா
குறள் 1048 / 1330
திருக்குறள் · thirukural.ai