அறத்துப்பால் · குறள் 202 / 1330
21. தீவினையச்சம்

தீயவை தீய பயத்தலால் தீயவைதீயினும் அஞ்சப் படும்.

Evil is to be dreaded more than fire; for it lands one in disaster.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத்தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

தீயவை தீய பயத்தலான் - தனக்கு இன்பம் பயத்தலைக் கருதிச் செய்யும் தீவினைகள், பின் அஃது ஒழித்துத் துன்பமே பயத்தலான், தீயவை தீயினும் அஞ்சப்படும்- அத்தன்மையாகிய தீவினைகள் ஒருவனால் தீயினும் அஞ்சப்படும். (பிறிதொரு காலத்தும், பிறிதொரு தேயத்தும், பிறிதோர் உடம்பினும் சென்று சுடுதல் தீக்கு இன்மையின் , தீயினும் அஞ்சப்படுவதாயிற்று.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.

— சாலமன் பாப்பையா