அறத்துப்பால் · குறள் 191 / 1330
20. பயனில சொல்லாமை

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்எல்லாரும் எள்ளப் படும்.

He who revels in frivolous talk will be despised by all.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான் - அறிவுடையார் பலரும் கேட்டு வெறுப்பப் பயன் இலவாகிய சொற்களைச் சொல்லுவான், 'எல்லாரும் எள்ளப்படும்' - எல்லாரானும் இகழப்படும். (அறிவுடையார் பலரும் வெறுப்பவே, ஒழிந்தாரானும் இகழப்படுதலின், எல்லாரும் எள்ளப்படும் என்றார். மூன்றன் உருபு விகாரத்தால் தொக்கது.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.

— சாலமன் பாப்பையா