காமத்துப்பால் · குறள் 1232 / 1330
124. உறுப்புநலனழிதல்

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்பசந்து பனிவாரும் கண்.

“Your pallid eyes streaming with tears proclaim the callousness of your lord.”

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் ( பிறர்க்குச்) சொல்வன போல் உள்ளன.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை யென்பதைச் சொல்லிக் காட்டுகின்றன.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை யென்பதைச் சொல்லிக் காட்டுகின்றன.

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

பசந்து, நீர் சிந்தும் கண்கள், நான் விரும்பியவர் என்னை விரும்பவில்லை என்பதைப் பிறர்க்குச் சொல்லும் போலும்!

— சாலமன் பாப்பையா